வங்கக் கடலில் புயல் சின்னம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து பலத்த மழைபெய்து வருகிறது.
தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைக்கு அப்பால் வங்கக் கடலில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் ஏற்கனவே இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை)இரவிலும் சென்னையில் பலத்த மழை பெய்தது.












Click it and Unblock the Notifications