போனஸ்: இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை
சென்னை:
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு,நேற்று (புதன்கிழமை) நடக்காத 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இரவு 7 மணிக்கு மீண்டும் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுஅதை, 25 சதவீதமாக உயர்த்தித் தரவேண்டும் என்று தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழக அரசுக்கும்இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத் துறைஅமைச்சர் நயினார் நாகேந்திரன், மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாட ஏற்படாததால், தொடர்ந்து புதன்கிழமையும் பேச்சுவார்த்தைநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு அரசிடமிருந்துபோக்குவரத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில், போனஸ் பேச்சுவார்த்தை இன்று தொடர்ந்துநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. அரசுடனான இந்தப்பேச்சுவார்த்தையில், அண்ணா தொழிலாளர் சங்கம், திராவிட தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி.,உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளன.












Click it and Unblock the Notifications