For Daily Alerts
Just In
புயல் சின்னம் வலுக்கிறது - மழை தொடரும்
சென்னை:
சென்னைக்குக் வடகிழக்கே வங்காள விரிகுடாவில் நேற்று முன்தினம் மையம் கொண்டிருந்த புயல் சின்னம்தொடர்ந்து அதே இடத்திலேயே மையம் கொண்டு மேலும் வலுவடைந்துள்ளது.
இதனால் தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழைதொடரும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேரளம் மற்றும் கர்நாடகத்திலும் கூட மழை தொடர்ந்து பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அதிக அளவாக 13 செ.மீ. மழையளவு வால்பாறையில் பதிவாகியுள்ளது.
Comments
Story first published: Thursday, November 8, 2001, 5:30 [IST]