சென்னையில் மழைக்கு முதியவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பெய்து வரும் கன மழைக்கு ஒரு முதியவர் பலியானார்.
சென்னை நகரில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பெய்த கன மழைக்கு ஒரு முதியவர் பலியானார்.
எண்ணூர் சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம். 61 வயதாகும் இவர் கூலி வேலை பார்த்து வந்தார்.தொடர்ந்து மழை பெய்து வேலை இல்லாததால் தனது குடிசை வீட்டிலேயே இருந்தார்.
புதன்கிழமை காலையில் வெளியே சென்று விட்டு கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்தார்.வந்த சிறிது நேரத்திலேயே குளிர் தாங்காமல் இறந்தார்.












Click it and Unblock the Notifications