உரிமம் இல்லாமல் மேன்சன் நடத்தினால் நடவடிக்கை
சென்னை:
சென்னை நகரில் காவல்துறையினரின் உரிமம் இல்லாமல் மேன்சன் (தங்கும் விடுதிகள்) நடத்தினால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை ஆணையர் முத்துக்கருப்பன் கூறினார்.
சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை நகரில் உரிமம் இல்லாமல் மேன்சன் மற்றும்சிற்றுண்டி விடுதிகள் (மெஸ்) நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய உரிமம் பெற்றே இவற்றை நடத்த வேண்டும்.
சென்னை நகரில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் கைதாகாமல் இருந்த 87 குற்றவாளிகளும் கைதுசெய்யப்பட்டு விட்டனர்.இவர்களைப் பிடிப்பதற்காக தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவர்களைக் கைது செய்யும் பணியில் சிறப்பாகஈடுபட்ட காவலர்களுக்கு தலா ரூ. 1000 பரிசு வழங்கப்படுகிறது.
சென்னை நகரில் பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான நடவடிக்கைகள்ஏற்கனவே துவங்கி விட்டன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications