கோவை: பொது இடங்களில் "தம்" அடித்த 219 பேர்மீது வழக்கு
கோயம்புத்தூர்:
நாடு முழுவதும் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கோவையில் முதல்முறையாக நடவடிக்கை துவக்கப்பட்டு, 219 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி, மஹாராஷ்டிர மாநிலகாங்ரஸ் தலைவர்களில் ஒருவரான முரளிதியோரா, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பஸ்ஸ்டான்டு, ரயில்நிலையம், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுஇடங்களில் புகைபிடிக்க அனைத்து மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களும் தடைவிதிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டது.
ஏற்கனவே டெல்லி, கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பொது இடங்களில் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) தமிழகத்தில் முதல் முறையாக, கோயம்புத்தூர் போலீசார் திடீர் ரெய்டில்ஈடுபட்டனர். அப்போது கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களின் பொது இடங்களில் புகைபிடித்துக்கொண்டிருந்த 219 பேர் பிடிக்கப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட எஸ்.பி., சொக்கலிங்கம், நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் கூறியதாவது,
கோவை மாவட்டத்தில், பொது இடங்களில் புகைபிடித்தாக திருப்பூரில் 23 பேரும், அவிநாசியில் 51 பேரும்,பல்லடத்தில் 17 பேரும், பொள்ளாச்சியில் 35 பேரும், போத்தனூரில் 35 பேரும், பெரிய நாயக்கன் பாளையத்தில்25 பேரும் போலீசாரால் பிடிக்கப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பிறகு அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்பட்டனர்.
மேலும் சிகரெட் விற்கப்படும் பெட்டிக்கடைகளில், நெருப்புப் பற்றவைப்பதற்கான நெருப்புக்கயிறு, மின்சாரலைட்டர் போன்றவற்றை வைத்திருக்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் கடைக்காரர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் வெறும் எச்சரிக்கை மட்டுமே
கோவையில் போலீசார் நடத்திய திடீர் ரெய்டு குறித்து தகவல் அறிந்ததும், சென்னை போலீசாரும் நேற்று தங்கள்நடவடிக்கையைத் தொடங்கினர். இவர்கள் பொது இடங்களில் புகைபிடித்துக் கொண்டிருந்தவர்களை எச்சரிக்கமட்டுமே செய்தனர். ஆனால் யார் மீதும் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications