அமெரிக்காவில் வாஜ்பாய்
வாஷிங்டன்:
மூன்று நாடுகளில் ஒன்பது நாள் பயணம் மேற்கொண்டுள்ள வாஜ்பாய் நேற்று (புதன்கிழமை) மாலை அமெரிக்காபோய்ச் சேர்ந்தார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தாதீவிரவாத அமைப்புக்கும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி அமெரிக்கதலைவர்களிடம் வாஜ்பாய் எடுத்துக் கூறவுள்ளார்.
நாளை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சையும் சந்தித்துப் பேசவிருக்கிறார் வாஜ்பாய். ஆப்கானிஸ்தானில்பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் தாக்குதல்கள் பற்றி இரு தலைவர்களும்பேசவுள்ளனர்.
இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படைகளைக் குவித்து வருவது பற்றி கவலை கொண்டுள்ள வாஜ்பாய்,காஷ்மீர் பிரச்சனையையும் எழுப்பவுள்ளார்.
பின்னர் சனிக்கிழமை (நவ.10) நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் உரை நிகழ்த்தும் வாஜ்பாய், அன்றைக்கேஇங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பும் சனிக்கிழமை ஐ.நா. சபையில் உரை நிகழ்த்துவதற்காக வரவுள்ளார்.ஆனாலும், அமெரிக்காவில் முஷாரப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணமே இல்லை என்றுவாஜ்பாய் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் உரை நிகழ்த்தவுள்ள நாடுகளுக்கு முஷாரப்தான் தலைமை தாங்குகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பயங்கரவாதத்த மிரட்டல்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர்மாதம் 14ம் தேதி வாஜ்பாய் உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications