பாகிஸ்தானில் வன்முறை- 3 பேர் பலி
இஸ்லமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானில் முஸ்லீம்கள் இன்று(வெள்ளிக்கிழமை) பந்த் மற்றும் பேரணியில் வன்முறை வெடித்தது. கலவரத்தை அடக்க போலீசார் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாயினர்.
முழு அடைப்பின் ஒரு பகுதியாக பல நகரங்களில் முஸ்லீம்கள் கண்டனப் பேரணிகளை நடத்தினர்.
பாகிஸ்தானின் மத்தியப் பகுதியில் உள்ள சர்கோதா நகரில் இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.இதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்கள் அமைதியாகவே இருந்தன. ஆனால்குவெட்டா நகரில் மதவாதிகள் அழைப்பு விடுத்திருந்த வேலை நிறுத்தத்துக்கு முழு ஆதரவு இருந்தது.பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
முன்னதாக, பாகிஸ்தான் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 500க்கும் மேற்பட்ட முஸ்லீம்மதவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
பெஷாவரில் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கராச்சியில் 150 பேரும், லாகூரில் 70 பேரும்,ராவல்பிண்டியில் 50 பேரும் கைது செய்யப்பட்டனர்.
முஷாரப் எச்சரிக்கை:
இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், பாகிஸ்தானில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் மதவாதிகளைக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அதை பார்த்துக் கொண்டுஇந்த அரசு பேசாமல் இருக்காது, மக்களும் அதை விரும்பமாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications