காஷ்மீர் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்போம்- புஷ்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

காஷ்மிரில் தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு அமெரிக்க ஆதரவு கொடுக்கும் என்று பிரதமர் வாஜ்பாயிடம்அமெரிக்க அதிபர் புஷ் உறுதியளித்தார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் வாஜ்பாய், அதிபர் புஷ்ஷைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அப்போது உலகம்முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை முடிந்ததும் இருவரும் கூட்டாக நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர்.

அப்போது அமெரிக்க அதிபர் புஷ் நிருபர்களிடம் கூறுகையில்,

காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு அமெரிக்காவின் முழுஆதரவும் கிடைக்கும். கடந்த அக்டோபர்1ம் தேதி, காஷ்மீர் சட்டசபையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தீவிரவாதத்தைப் பொறுத்தமட்டில், அது அமெரிக்காவில் நடந்தாலும் உலகத்தில் வேறு எங்கு நடந்தாலும்ஒன்றாகத் தான் நாங்கள் கருதுகிறோம்.

தீவிரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இந்தக் கருத்தில் பிரதமர் வாஜ்பாய்உட்பட அனைத்துத் தலைவர்களும் ஒரே கருத்தைத் தான் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவுக்கு வருமாறு, பிரதமர் வாஜ்பாய் விடுத்த அழைப்பை ஏற்று விரைவில் நான், இந்தியாசெல்லவிருக்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+