For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்திரிக்கைகளில் பெயர் வர வீண் பழி கூறுகிறார் கருணாநிதி- அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் முதல்வர் கருணாநிதி பத்ரிக்கைகளில் தினமும் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காக, அரசின்நலத்திட்டங்கள் அனைத்தையும் குறை கூறிவருகிறார் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் துரைராஜ் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து சென்னையில் நேற்று(வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்த ஆண்டு 2001-2002 ல் மகளிர் மேம்பாடு முக்கியம் எனக்கருதி, கிராமப்புற மகளிருக்காக துப்புரவு வளாகம்அமைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களே பராமரிக்க ஏதுவாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக இந்த ஆண்டு எம்.எல்.ஏ. நிதியிலிருந்து, தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 308 கிராம ஊராட்சிகளில்மகளிருக்கான துப்புரவு வளாகம் அமைக்கப்பட உள்ளது.

மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்ட மாணவ, மாணவியருக்கு விடுதிகள் அமைக்கஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் ரூ.24 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில்,நிறைவேற்றப்பட உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பத்திரிக்கைகளில் தினமும் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காக மக்களுக்குப்பயன்படும் திட்டங்களைக் குறை கூறிவருகிறார்.

குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிந்தனைத் திட்டமான கிராமப்புற மகளிர் துப்புரவு வளாகம் கட்டும்திட்டம் இந்தியாவில் முதல் முதலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை தி.மு.க ஆட்சியில் செயல்படுத்த முடியவில்லை என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையில்லாமல்குறைகூறுவதையே தொழிலாகக் கொண்டு நிருபர்களுக்குப் பேட்டியளித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X