அணு குண்டுகள் வீசுவேன்: பின் லேடன் மிரட்டல்
இஸ்லாமாபாத்:
அமெரிக்காவுக்கு எதிராக இராசயன மற்றும் அணுகுண்டுத் தாக்குதலை நடத்த தயாராக இருப்பதாக சர்வதேசதீவிரவாதி ஒசாமா பின்லேடன் கூறினார்.
அமெரிக்கா எங்கள் மீது இராசயன மற்றும் அணுக்கதிர் ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தத்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு தாக்குதல் நடத்தப்படுமானால், நாங்களும் பதிலுக்கு இராசயன மற்றும்அணுக்கதிர் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவோம். எங்களிடமும் அதுபோன்ற ஆயுதங்கள் உள்ளன.மேலும் இந்தத் தாக்குதலுக்காக எங்கள் படை தயாராக உள்ளது.
செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்டத் தாக்குதல், அந்நாட்டு பெண்களையும், குழந்தைகளையும்அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பட்டதல்ல.
அந்நாட்டு பொருளாதாரத்தையும், ராணுவ பலத்தையும் சீர்குலையச் செய்வதற்காகத் தான் அந்தத் தாக்குதல்நடத்தப்பட்டது என்றார்.
இந்தத் தாக்குதலில் தனது பங்கு இருப்பதை என்பதை பின்லேடன் மறுக்கவில்லை.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications