தீபாவளி முன் பணம் கேட்டு அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீபாவளி முன் பணம் கேட்டு தமிழக அரசு ஊழியர்கள் இன்று (திங்கள்கிழமை) முதல் காலவரையற்றஉண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன் பணம் தரமுடியாது என்று தமிழக அரசு கூறிவிட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத்துவங்கியுள்ளனர்.
அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலைதுவங்கினர்.
சென்னை-சேப்பாக்கத்தில் அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இன்று பிற்பகல் அவர்கள் தலைமைச் செயலகத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்போவதாக ஸ்ரீதரன் கூறினார்.












Click it and Unblock the Notifications