தாடி, புர்ஹாவிருந்து விடுதலை: மகிழ்ச்சியில் துள்ளும் ஆப்கான் நகர மக்கள்
மஷார்-ஏ-ஷெரீப்:
தலிபான்கள் வசம் இருந்த மஷார்-ஏ-ஷெரீப் நகரின் சலூன் கடைகள் நிரம்பி வழிகின்றன. 4 ஆண்டுகளாகவளர்ந்திருந்த தாடிகளை சவரம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான ஆண்கள் சலூன் கடைகளை நோக்கிபடையெடுத்து வருகின்றனர்.
இதனால், தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் தாடிகளை வளர்த்து வந்தனர். தாடிகளை டிரிம்கூட செய்யாமல் இருந்து வந்தனர்.
மூன்று தினங்களுக்கு நார்த்தர்ன் அலையன்ஸ் இந் நகரைக் கைப்பற்றியது.
இதையடுத்து ஆண்கள் தாடிகளை மழிக்க ஆரம்பித்துள்ளனர். அதே போல பெண்கள் தங்களது புர்ஹாக்களைதூக்கி எறிய ஆரம்பித்துள்ளனர். பெண்கள் தங்கள கண்கள் உள்பட உடலின் எந்தப் பாகத்தையும் வெளியில்தெரியும்படி உடை உடுத்தத் தடை விதித்திருந்தனர் தலிபான் மதவாதிகள்.
இப்போது இந்தத் தடைகளை நார்த்தர்ன் அலையன்ஸ் உடனடியாக நீக்கிவிட்டது. இந்தப் படையினரின்பாதுகாப்புடன் சுதந்திரமாக நடமாட ஆரம்பித்துள்ளனர் இந்த நகர மக்கள்.
அதே போல டிவிக்குத் தடை, பாட்டுக்குத் தடை, விளையாடத் தடை என ஏகபோகமாக எல்லாவற்றுக்கும் தலிபான்காட்டுமிராண்டிப் படையினர் விதித்திருந்த தடைகளை நார்த்தர்ன் அலையன் உடனடியாக நீக்கிவிட்டது.
இதனால் கேசட் கடைகள் மீண்டும் திறக்க ஆரம்பித்துள்ளன. பழைய டிவிகள் வீடுகளில் தூசு தட்டப்படுகின்றன.ரேடியோவில் மக்கள் இசை கேட்க ஆரம்பித்துள்ளனர்.
ஒரு காட்டுமிராண்டி ஆட்சியிடம் இருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் அந்த மக்கள் புதிதாய் வாழ்க்கையைத் துவக்கஆரம்பித்துள்ளனர்.
இந்த மக்கள் தலிபான்களைத் திட்டுவதைவிட இந்தக் காட்டுமிராண்டிகளை ஆதரித்து வந்த பாகிஸ்தானைத் தான்அதிகம் திட்டி வருகின்றனர்.
புதிய சுதந்திரத்தை ஆடல்களும் பாடல்களுமாகக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர் இந்த மக்கள். தங்களைவிடுவித்த நார்த்தர்ன் அலையன்ஸ் வீரர்களுக்கு இனிப்புகள் கொடுத்து வாழ்த்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications