ரேஷன் கடை ஊழியர்களும் ஸ்டிரைக்
சென்னை:
ரேஷன் கடை ஊழியர்களும் இன்று (திங்கள்கிழமை) காலை வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
இந்த ஆண்டு 8.33 சதவிகிதம் மட்டுமே போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்தசனிக்கிழமை முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.
இந்த ஸ்டிரைக் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று ரேஷன் கடை ஊழியர்களும் தங்களுடைய வேலைநிறுத்தத்தைத் துவங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு கொடுத்ததைப் போலவே இந்த ஆண்டும் 20 சதவிகித போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக ரேஷன் கடை ஊழியர் சங்கங்கள் தெரிவித்தன.
இதையடுத்து ரேஷன் கடை மூலம் உணவுப் பொருள்கள் வழங்கும் பணி வெகுவாகப் பாதிக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் இதற்குத் தக்கவாறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தமிழக கூட்டுறவு மற்றும் உணவுத் துறைஅமைச்சர் தனபால் கூறியுள்ளார்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே பாக்கியிருக்கையில் இப்படித் தொடர்ந்து ஸ்டிரைக்குகள் நடந்துகொண்டிருப்பதால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications