For Daily Alerts
Just In
அஸ்ஸாமில் மருந்து குடித்த 1,500 குழந்தைகளுக்கு வாந்தி
குவாஹாத்தி:
அஸ்ஸாமில் வைட்டமின் மருந்து குடித்த ஒரு குழந்தை உயிரிழந்தது. மேலும் 1,500 குழந்தைகள் பலவிதநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
நாகோன் மாவட்டத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உயிரிழந்துவிட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும்500க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுவலி மற்றும் வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் இருந்து மொத்தம் 1,500 குழந்தைகள் வரை இதுபோன்ற பிரச்சனைகளால் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், குழந்தைகளுக்குவழங்கப்பட்ட வைட்டமின் மருந்தின் மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளன.
இச்சம்பவம் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Story first published: Tuesday, November 13, 2001, 5:30 [IST]