புலிகளின் மனித வெடிகுண்டு தாக்கி 3 வீரர்கள் பலி
கொழும்பு:
மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த புலி தன் உடலில் கட்டியிருந்தகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 3 ராணுவ வீரர்கள் இறந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதில் அந்தப் புலி உடல் சிதறி இறந்தார். அங்கிருந்த 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவீரர் படுகாயமடைந்தார். 8 பொது மக்களும் படுகாயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாகஉள்ளது.
இந்த நகரில் கடந்த ஒரு வாரத்தில் நடக்கும் இரண்டாவது மனித வெடிகுண்டுத் தாக்குதல் இது. சில நாட்களுக்குகல்குடா முகாமில் இருந்த காவல்துறை உயர் அதிகாரியைக் கொல்ல வந்த புலி உடல் சிதறி இறந்தார்.
திருகோணமலையிலும் தாக்குதல்:
திருகோணமலையில் புலிகள் தாக்கியதில் 2 ராணுவ வீரர்கள் இறந்தனர்.
சோமபுரா காட்டுப் பகுதியில் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை புலிகள் தாக்கியதில்இந்த 2 வீரர்கள் இறந்தனர்.