வால் நட்சத்திரம்: இந்திய செயற்கைக் கோள்கள் தப்புமா?
பெங்களூர்:
வானில் லியோனாய்டு என்ற வால் நட்சத்திரத்திலிருந்து விழும் எரிகற்கள் நமது செயற்கைக் கோள்கள் மீதுவிழாமல் தடுக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன என்று இந்திய வின்வெளிஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
இந்திய வின்வெளி ஆராய்ச்சிக் கழகம் பல செயற்கைக் கோள்களை ஆராய்ச்சிக்காகவும் தொலைத்தொடர்புக்காகவும் விண்ணில் செலுத்தியுள்ளது.
லியோனாய்டு என்ற வால் நட்சத்திரத்திலிருந்து விழும் எரிகற்கள் வரும் 18ம் தேதி செயற்கைக் கோள்களைத்தாக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
33 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த லியோனாய்டு சூரியனுக்கு மிக அருகில் செல்லும். அப்போது உண்டாகும்வெப்பத்தில் வால் நட்சத்திரத்தின் வால் பகுதியில் உள்ள ஐஸ் மற்றும் அதிலுள்ள தூசு போன்ற பொருட்கள்அதிலிருந்து பிரிந்து கற்கள் போல விழும். இந்த எரிகற்கள் செயற்கைக் கோள்கள் மீது விழுந்தால், அதிலுள்ளசோலார் செல்கள் மற்றும் கண்ணாடிப் பாகங்களை சேதப்படுத்திவிடும்.
சில சமயங்களில் செயற்கைக் கோள்களில் அதிர்வுகளையும் ஏற்படுத்திவிடும். மேலும் மின் மாற்றங்களைஏற்படுத்துவதோடு, செயற்கைக்கோள்களில் உள்ள மைக்ரோ பிராசஸர்களை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது.
இதிலிருந்து செயற்கைக் கோள்களைப் பாதுகாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய செயற்கைக் கோள்களில் உள்ள கேமராக்கள், பதிவுக்கருவிகளை இந்த எரிகல் தாக்குதலின்போது இயக்காமல் நிறுத்திவிடத் திட்டமிட்டுள்ளது.
மேலும் எரிகற்கள் விழும்போது, செயற்கைக் கோளின் சோலார் தகடுகள் மீது கற்கள் விழுாமல் தடுக்க அவைதானாக பக்கவாட்டில் திரும்பிக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற செயல்கள் மூலம் அதிகபட்சம் 10 மணி நேரத்திற்கு தொடர்ந்து கற்கள் விழுந்தாலும், அவைசெயற்கைக் கோள்களின் மீது பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாக்க முடியும்.
இந்த எரிகற்கள் வரும் 18ம் தேதி மாலை 2.30 மணி முதல் 3.30 வரையும், பிறகு மீண்டும் இரவு 10.30 மணி முதல்11.30 மணி வரையும் அதிகமாக விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications