மதுரை மாநகராட்சி உதவிக் கமிஷ்னர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

அனுமதியின்றி மாநகராட்சிக் கடைகளை இடித்து அகலப்படுத்திய ஒயின்ஷாப் உரிமையாளர் மீது நடவடிக்கைஎடுக்காத மாநகராட்சி துணைக் கமிஷ்னர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டின் மேற்குப் பகுதியில் மேல வெளி வீதியில் மாநகராட்சிக்குச் சொந்தமானஎப்-பிளாக் கடைகள் உள்ளன.

இவற்றில் எப்-41 மற்றும் எப்-42 ஆகிய 2 கடைகளில் ஒருவர் ஒயின்ஷாப் நடத்தி வந்தார். அவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு இந்த 2 கடைகளுக்கிடையே உள்ள சுவரை மாநகராட்சி அனுமதியின்றி இடித்துவிட்டார்.

இதையறிந்த மாநகராட்சிக் கமிஷ்னர் ஹர்சகாய் மீனா அந்த 2 கடைகளையும் பூட்டி சீல் வைக்கும்படி மாநகராட்சிதெற்கு மண்டல உதவிக் கமிஷ்னர் பழனிவேலு மற்றும் மார்க்கெட் கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோருக்குஉத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் காலதாமதம் செய்துள்ளனர். இதைப் பயன்படுத்திகடைக்காரர்கள் மாநகராட்சி உத்தரவை எதிர்த்து கோர்ட்டில் தடை பெற்றுவிட்டனர்.

ஆனால் இதையறியாமல் கடந்த 13ம் தேதியன்று மாநகராட்சி அதிகாரிகள் கடையை சீல் வைக்க சென்ற போது,கடை உரிமையாளர்கள் கோர்ட் வழங்கிய தடை உத்தரவைக் காட்டியுள்ளனர். இதனால் மாநகராட்சிஅதிகாரிகளால் அந்தக் கடை மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

எனவே மாநகராட்சி உதவிக் கமிஷ்னர் பழனி வேலு மற்றும் மார்கெட் கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோரைசஸ்பெண்டு செய்து கமிஷ்னர் ஹர்சகாய் மீனா உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+