காங்கிரசில் சேர விடாமல் வாழப்பாடியைத் தடுக்கிறாரா இளங்கோவன்?
சென்னை:
வாழப்பாடி ராமமூர்த்தியை காங்கிரசில் சேரவிடாமல் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தடுத்து வருகிறார்என்று காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த காங்கிரசில் சேரவிரும்பும் வாழப்பாடி ராமமூர்த்தியைஇளங்கோவன் தனது அறிக்கைகளால் தடுத்து வருகிறார் என்று சிவகங்கை எம்.பியும்., காங்கிரஸ் மனித உரிமைப்பிரிவின் தலைவருமான சுதர்சன நாச்சியப்பன் குற்றம் சாட்டினார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் பல பெரிய தலைவர்கள் காங்கிரசில் இணைய விரும்புகிறார்கள். குறிப்பாக தமிழக காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி மீண்டும் காங்கிரசில் இணைய விரும்புகிறார். ஆனால்இளங்கோவன் தனது அறிக்கைகள் மூலம் அதைத் தடுத்து வருகிறார். இவ்வாறு இருந்தால் எப்படி கட்சியைப்பலப்படுத்த முடியும்.
மேலும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி ஆகியோரும் காங்கிரசில் இணைய வேண்டும்.
தமிழக போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் பிரச்சனையை அரசு உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications