காண்டஹாரிலிருந்து வெளியேற முல்லா ஒமர் முடிவு: தலிபான் ஆட்சி முடிகிறது
வாஷிங்டன்:
ஆப்கானிலிருந்து தப்பி ஓட தலிபான் ஆட்சியாளர் முல்லா முகம்மது ஒமர் முடிவு செய்துள்ளார். மேலும்காண்டகாரை விட்டு தமது படைகளை வெளியேறவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தலிபான் ஆட்சிஅதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது.
ஆனால், தலிபான்கள் காண்டாஹார் நகரைத் தான் தலைமையகமாக வைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.இதனால் இந்த நகரை தலிபான்கள் தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் தற்போது நார்த்தர்ன்அலையன்ஸ் படைகள் காண்டஹாரை நெருங்கிவிட்டன.
அதே நேரத்தில் இந்த நகரை புஷ்தூன் இனத்தைச் சேர்ந்த பழங்குடிப் படைகள் முற்றுகையிட்டுவிட்டன.இவர்களுக்கு நார்த்தர்ன் அலையன்ஸ் உதவி வருகிறது.
இதையடுத்து தனது படைகளை அந்த நகரை விட்டு வெளியேறிவிடுமாறு தலிபான் தலைவர் முல்லா ஒமர்உத்தரவிட்டுள்ளார். அதே போல தானும் காண்டஹாரை விட்டு வெளியேறிவிடத் தயாராக இருப்பதாக நார்த்தர்ன்அலையன்ஸ் படைகளுக்கும், புஷ்தூன் பழங்குடியினருக்கும் செய்தி அனுப்பியுள்ளார்.
ஆயிரக்கணக்கான தனது படையினருடன் மலைப் பகுதிக்குச் சென்றுவிடத் தயாராக இருப்பதாக ஒமர் சமாதானச்செய்தியை அனுப்பியுள்ாளார்.
இதை ற்ேக புஷ்தூன் பழங்குடிப் படைகள் தயாராக உள்ளன. ஆனால், நார்த்தர்ன் அலையன்ஸ் படைகள் இதற்குத்தயாராக இல்லை என்று தெரிகிறது.
இவ்வாறு தலிபான்கள் காண்டஹாரைவிட்டு வெளியேறிவிட்டால் ஆப்கானிஸ்தானில் அவர்களது ஆட்சி முடிவுக்குவந்ததுவிட்டது என்று அர்த்தம்.












Click it and Unblock the Notifications