தடையை மீறி பஸ் தொழிலாளர்கள் இன்று பேரணி
சென்னை:
போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சென்னையில் சனிக்கிழமை கண்டனப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.ஆனால் அதற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும் தடையை மீறி பேரணி நடத்தப்படும் என்றுதொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
தீபாவளி போனஸ் கோரி போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் தங்களதுகோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் இதற்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. பேரணி நடத்தினால் விஷமிகள் புகுந்து கலவரம்ஏற்படுத்தக் கூடும் என்பதால் அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்த மட்டும் போலீஸார் அனுமதிஅளித்துள்ளனர்.
இருப்பினும், போலீஸ் தடையை மீறி பேரணி நடத்தப்படும் என்று தொழிலாளர்கள் தரப்பில்அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகமான பல்லவன் இல்லம்அருகேயிருந்து சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் வரை பேரணி நடத்த தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications