அமெரிக்க விமானத் தாக்குதலுக்கு 30 பேர் பலி
இஸ்லாமாபாத்:
இன்று அதிகாலை ஆப்கானில் நங்கர்ஹார் மாகாணத்தின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய விமானத்தாக்குதலில் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அமெரிக்கப் படைகள் ஆப்கானின் வடக்குப்புறமாகாணமான நங்கர்ஹார் மீது நடத்திய விமானத் தாக்குதலில் 30 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்என்று பாகிஸ்தானில் இருந் வெளியாகும் ஆப்கான் இஸ்லாமிக் பிரஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
காண்டஹாரை ஒப்படைக்க பேச்சுவார்த்தை
காண்டஹார் நகரை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம் ஒப்டைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆப்கானில் வாழும் பழங்குடி இனத்தவர்களான பஷ்தூண் இனத் தலைவர்களில் ஒருவரான ஹமித் கர்சாய்மிதவாத தலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். இதனால் காண்டஹார் நகரத்தில் எந்தத் தாக்குதலும்இல்லை என்றாலும் அந்த நகர் முழுவதும் பரபரப்பாக உள்ளது.
இதுகுறித்து ஹமித் கர்சாய் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறுகையில்,
காண்டஹார் நகரத்தில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் தாக்குதல் எதுவுமில்லை. நாங்கள்காண்டஹார் நகரை ஒப்படைக்கக் கோரி மிதவாத தலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம் என்றார்.
ஹமித் கர்சாய் என்பவர் ஆப்கானின் முன்னாள் மன்னர் ஜாஹிர் ஷாவின் கீழ் மந்திரியாக இருந்தவர். மேலும்அவரது நெருங்கிய நன்பருங்கூட. காண்டஹாரையும், சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனையும் ஒப்படைக்கவேண்டும் என்பதே இவர் கூறிவரும் கோரிக்கை.
இதற்காக இவர் தலிபான்களின் எதிர்ப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.