பின்லேடனின் இன்னொரு நெருங்கிய நண்பர் சாவு

Subscribe to Oneindia Tamil

தாஷ்கண்ட் (உஸ்பெகிஸ்தான்):

பின் லேடனின் தீவிர ஆதரவாளரும், குண்டூஸ் நகரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவருமான ஜூமாநாமாங்கனி கொல்லப்பட்டார்.

நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார்.

அடிப்படையில் உஸ்பெக் இனத்தவரான நாமாங்கனி, தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். குண்டூஸ்நகரையும் இவர் கட்டுப்பாட்டில் தான் தலிபான் கொடுத்திருந்தது.

நாட்டின் வடக்குப் பகுதியில் அனைத்து நகரங்களும் நார்த்தர்ன் அலையன்ஸ் கட்டுப்பாட்டில் வந்துவிட்டநிலையில் குண்டூஸ் நகரம் இப்போது கூட தலிபான் ஆதரவு தீவிரவாதிகளிடம் தான் உள்ளது.

இந்த நகரின் சில தலிபான் கமாண்டர்கள் சரணடைய முன் வந்துவிட்டனர். ஆனால், நாமாங்கனி தொடர்ந்துபோரில் ஈடுபட்டு வந்தார். இவரது படைகள் மீது அமெரிக்க விமானங்களும் நார்த்தர்ன் அலையன்ஸ்படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இன்று நடந்த பயங்கரத் தாக்குதலில் நாமாங்கனியும் அவரது படையைச் சேர்ந்த 24 பேரும்கொல்லப்பட்டுவிட்டதாக நார்த்தர்ன் அலையன்சின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அப்துல் ரஷீத் தோஸ்தம்தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் ஆட்சி போய்விட்டாலும் கூட நாமாங்கனியின் கட்டுப்பாட்டில் உள்ள குண்டூஸ் நகரில் தஞ்சம் புகபின் லேடன் திட்டமிட்டிருந்தார். இதற்காக தனது அரேபிய வீரர்களையும், பாகிஸ்தான், செசன்யாவிலிருந்துஅழைத்து வரப்பட்ட கூலிப் படைகளையும் லேடன் இந்த நகரில் தான் நிறுத்தியிருந்தார்.

இதனால் தான் நாட்டின் பெரும் பகுதியைப் பிடித்துவிட்டாலும் கூட நார்த்தர்ன் அலையன்சிடம் குண்டூஸ் இன்னும்சிக்கவில்லை. அங்குள்ள பின்லேடன் ஆதரவு வீரர்கள் கடும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது தவிரசரணடைய நினைக்கும் தலிபான் வீரர்களையும் சுட்டும், வெட்டியும் கொன்று குவித்து வருகின்றனர்.

இந் நிலையில் இந் நகரின் கமாண்டரான நாமாங்கனி கொல்லப்பட்டது பின் லேடனுக்கு கிடைத்த மிகப் பெரியஅடியாகக் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+