பான் மசாலா, குட்காவுக்கு இன்று முதல் தடை
சென்னை:
தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) முதல் பான் மசாலா, குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருட்களைஉபயோகிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
புகையிலை, பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களை தமிழகத்தில் யாரும் விற்கக் கூடாது.
உடல் நலத்திற்கும் பொது சுகாதாரத்திற்கும் கெடுதல் ஏற்படுவதால் இந்தப் பொருட்களுக்கு இன்று முதல் தடைவிதிக்கப்படுகிறது.
மேலும் இப்பொருட்களை சேகரித்து வைப்பதும் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு சேகரித்து வைத்திருப்பதுகண்டுபிடிக்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு, அதை வைத்திருப்பவர்கள் கடுமையாகத்தண்டிக்கப்படுவார்கள்.
இந்தத் தடை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெளியாகும் சில முன்னணிப் பத்திரிகைகளில் பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை ஆகியவற்றைவிற்க, உபயோகிக்க தடை என்ற தமிழக அரசின் எச்சரிக்கை அறிக்கை விளம்பரமாக வெளியாகியுள்ளது
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்று கடந்த சில நாட்களுக்குமுன்புதான் தடை விதிக்கப்பட்டது என்பதும், இதை மீறி புகை பிடித்த ஆயிரக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications