இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

ஜம்மு:

இன்று (திங்கள்கிழமை) காலை காஷ்மீர் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகளை எல்லைப்பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

காஷ்மீரில் உள்ள அர்னியா பகுதி வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் சில தீவிரவாதிகள் ஊடுருவமுயலுவதாக வந்த தகவலையடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படையினர் உஷாரடைந்தனர்.

அப்பகுதியில் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சில தீவிரவாதிகள் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர்.

உடனே எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். தீவிரவாதிகளும்பதிலுக்குச் சுட்டனர்.

இச்சம்பவத்தில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் திரும்பி ஓடிவிட்டனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏ.கே. ரக துப்பாக்கி ஒன்றும், நான்கு கையெறி கிரினேட் குண்டுகளும்,இரண்டு பத்திரிக்கைகளும் கைப்பற்றப்பட்டன.

லஷ்கார் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவம்

இதற்கிடையே நேற்று திடீர்த் தாக்குதல் நடத்தி 10 ராணுவ வீரர்கள் உள்பட 13 பேரைக் கொன்ற தீவிரவாதிகளைராணுவத்தினர் தேடி வருகின்றனர்.

விடுமுறைக்காக ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தபோதுதான் தீவிரவாதிகள்இந்தத் திடீர்த் தாக்குதலை நடத்தினர். குறைந்தது மூன்று பேராவது இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றுராணுவத்தினர் கருதுகின்றனர்.

லஷ்கர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பு இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்தியதீவிரவாதிகளை ரம்பான் பகுதியில் ராணுவத்தினர் முழு வீச்சில் தேடி வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டில், நெடுஞ்சாலையில் வைத்து ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குவது இது ஆறாவது முறைஎன்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+