தாற்காலிகங்கள் ஓட்டிய 2 பஸ்கள் கவிழ்ந்தன
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூரிலும் பண்ருட்டியிலும் தாற்காலிக டிரைவர்கள் ஓட்டி வந்த அரசு பஸ்கள் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார்.47 பேர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ் ஒன்று கவிழ்ந்தது. இவ்விபத்தில் அதில் பயணம் செய்தஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
பண்ருட்டி அருகே ஏற்பட்ட மற்றொரு சாலை விபத்தில் தாற்காலிக டிரைவர் ஓட்டி வந்த அரசு பஸ் வயலுக்குள்புகுந்து கவிழ்ந்ததில் 27 பேர் காயமடைந்தனர்.
பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, தாற்காலிகமாக டிரைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில்பஸ் விபத்துக்கள் தொடர்கதையாகி உள்ளன.












Click it and Unblock the Notifications