பஸ் ஸ்டிரைக்: கூடியது அமைச்சரவை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர இனறு முதல்வர் பன்னீர்செல்வம்தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்து வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் காலையில் தொடங்கிய இந்தக் கூட்டம் பகல் வரை நீடித்தது.
பஸ் ஸ்டிரைக் காரணமாக மாநிலம் முழுவதும் அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமூகமாகப்பேசி பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவது இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதே நேரத்தில் மாநிலத்தின் நிதி நிலைமை படுமோசமாக இருப்பதால் உடனடியாக வருவாயை அதிகரிக்கும்திட்டங்களை அமல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications