தேர்தலில் வன்முறையைத் தூண்ட எல்.டி.டி.ஈ. சதி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

தேர்தலின்போது பெரும் அளவில் வன்முறையைத் தூண்ட விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இலங்கைகாவல்துறை புகார் கூறியுள்ளது.

இந்த மாவட்டத்தின் ஒண்டாச்சிமடம் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட தம்பிராஜன்ஜெயக்குமார் கடந்த சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை புலிகள் தான் சுட்டுக் கொன்றனர் எனகாவல்துறை கண்காணிப்பாளர் சிசிரா குணவர்த்தனே குற்றம் சாட்டினார்.

அவர் கூறுகையில், மேலும் பல வேட்பாளர்களைக் கொல்லவும் பாதுகாப்பை நிலைகுலையச் செய்யவும்விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, அனைத்து வாக்காளர்களும் போதிய பாதுகாப்புடனும்எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது.

இந் நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் வட பகுதியில் தேர்தல் பிரச்சாரம் முழுமையாகபாதிக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இங்கு வேட்பாளர்களைக் கடத்துவதும், அவர்கள் உயிருக்கு மிரட்டல் விடுப்பதும் அதிகரித்துவிட்டதால் யாரும்பிரச்சாரத்துக்கு தெருவில் செல்வே அஞ்சுகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை 2 வேட்பாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர், பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்களும் நடந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+