நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் ரகளை
டெல்லி:
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே எதிர்க் கட்சியினர் பெரும் கூச்சல் குழப்பம்எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது தான் பிரச்சனை வெடித்தது. தெகல்கா விவகாரத்தில் அடிபட்ட பெர்னாண்டசஸ் மீதான விசாரணைஇன்னும் முடியாத நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்கியதை எதிர்த்து காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிஉறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர்.
அவர்களை சமாதானப்படுத்த அவைத் தலைவர் பாலயோகி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அடுத்து எந்தவிதமான செயலிலும் ஈடுபட முடியாமல் அவைதிணறியது.
சிறிது நேரம் கழித்துத் தான் அவர்கள் அடங்கினர். அவையில் அமைதி திரும்பியவுடன் காஷ்மீர் சட்டசபை மீதுநடந்த தாக்குதலிலும், நியூயார்க்கில் நடந்த தாக்குதலிலும் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலிசெலுத்தப்பட்டது.
பின்னர் மறைந்த உறுப்பினர்கள் மாதவராவ் சிந்தியா, மரகதம் சந்திரசேகர்ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தியவுடன்இன்று அவை ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்யசபா:
ராஜ்யசபாவிலும் ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு எதிராக எதிர்க் கட்சியினர் கூச்சல் செய்தனர். பின்னர் மறைந்தஉறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications