பெண்ணின் பிணத்தை வைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல்
உசிலம்பட்டி:
பெண்ணின் பிணத்தை வைத்துக் கொண்டு பணம் கேட்டு போராட்டம் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கருக்காட்டான்பட்டியில் காமராஜ் என்பவர் வீடு கட்டி வந்தார். இந்தக் கட்டடவேலையில் பாக்கியம், சகுந்தலா, காசிமாயன் ஆகிய மூன்று பேர் ஈடுபட்டிருந்தனர்.
சுவர் கட்டிக் கொண்டிருக்கும்போது அது திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாக்கியம் படுகாயமடைந்து மதுரைஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதையடுத்து பாக்கியத்தின் உடலுடன் உசிலம்பட்டி திரும்பிய இவரது உறவினர்கள் நேராக காமராஜிடம் சென்றுநஷ்ட ஈடு கேட்டனர். அவர், உடனடியாக இறுதிச் சடங்குக்காக ரூ. 5,000 தர ஒப்புக் கொண்டார். பின்னால்கொஞ்சம் பணம் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
ஆனால், இரண்டரை லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று பாக்கியத்தின் உறவினர்கள் மிரட்டினர். பணம் தரகாமராஜ் மறுத்ததால் அவரது கட்டடத்துக்குள் பாக்கியத்தின் உடலைப் போட்டது அந்தக் கும்பல். மேலும் அந்தகட்டடத்திலேயே உடலைப் புதைப்போம் எனவும் மிரட்டியது அந்த பணம் பறிக்கும் கும்பல்.
இதையடுத்து காமராஜ் போலீசில் புகார் செய்தார். விரைந்து வந்து போலீசார் அந்தக் உடனே கைது செய்யாமல்சமாதானம் பேசினர். ஆனால் அவர்கள் போலீசாரையும் சேர்த்து மிரட்டவே உடனடியாக அந்தக் கும்பலைச் சேர்ந்தபெருமாள், தர்மர், கருப்பைய்யா, சின்னச்சாமி ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
இவர்களுக்கு உதவிய வக்கீல் முருகபாண்டி, மாதரை என்ற பாண்டி, வேலு ஆகிய நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
உடலும் போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.