பஸ்சின் பிரேக்கைக் கழற்றிச் சென்ற கண்டக்டர்
தேனி:
போனஸ் பிரச்சனையை தமிழக அரசு இன்னும் தீர்த்து வைக்காததால் ஆத்திரமடைந்த அரசு பஸ் கண்டக்டர்ஓடிக்கொண்டிருந்த பஸ்சை நிறுத்தி பிரேக் லீவரைக் கழற்றி எடுத்துச் சென்றுவிட்டார்.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் போடியில் அரசு போக்குவரத்துக் கழகத்தில்கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். தற்போது போனஸ் பிரச்சனை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளஇவர், போடியில் இருந்து தேனிக்கு வந்த அரசு பஸ் ஒன்றில் ஏறினார். இநந்த பஸ்ஸை தாற்காலிக டிரைவர் ஓட்டிவந்தார்.
அந்த பஸ் கோடாங்கிபட்டியில் நின்றவுடன் டிரைவருக்கு அருதே வந்த ரமேஷ், அவரை தள்ளிவிட்டுவிட்டுபிரேக்கை பெரிய பாறாங்கல்லை வைத்து உடைத்தார். பிரேக் லீவரை தனியே உடைத்துக் கழற்றி கையுடன்எடுத்துச் சென்றுவிட்டார். இதைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்து போன பயணிகள சுதாரித்துக் கொண்டு அவரைவிரட்டினர்.
ஆனால், அவர் ஓடிவிட்டார்.
இதையடுத்து அமுக்குவதற்கு பிரேக் லீவரே இல்லாத இந்த பஸ்சில் செல்ல தயாராக இல்லாத பயணிகள்அனைவரும் வேறு பஸ்ஸில் ஏறி தேனிக்குச் சென்றனர்.
இதையடுத்து பஸ்ஸை ஓட்டிய தற்காலிக டிரைவர் மணிகண்டன் அரசு பஸ் கண்டக்டர் ரமேஷ் மீது போலீசில் புகார்கொடுத்துள்ளார். இதனடிப்படையில் பழனிசெட்டிபட்டி போலீசார் ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்த அவரைத்தேடி வருகின்றனர்.