இந்தியா தயாரித்த ஹெலிகாப்டர் தோல்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியா வடிவமைத்துள்ள அட்வான்ஸ் லைட் ஹெலிகாப்டர் மிக உயரமான இடங்களில் பறக்க இயலாமல்தடுமாறி தோல்வியடைந்துவிட்டது.

இதையடுத்து இமயமலை போன்ற பகுதிகளில் இயக்க அதி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டர்களை வேறுநாடுகளில் இருந்து வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டரை பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வடிவமைத்துத்தயாரித்துள்ளது. ஆனால், இதன் மாதிரிகளை (புரோட்டேடைப்) இயக்கிப் பார்த்த ராணுவம்திருப்தியடையவில்லை.

இந்த ஹெலிகாப்டர் மிக அதிகமான உயரங்களில் தடுமாறுகிறது. இந்த உயரத்தில் பறக்க போதிய சக்தியில்லாமல்திணறகிறது. இதை வைத்துக் கொண்டு பாதுகாப்புப் பணிகளிலும், தாக்குதல்களிலும் இறங்க முடியாது என இந்தியராணுவம் கூறிவிட்டது.

இந்த ஹெலிகாப்டரை தரம் உயர்த்தினால் தான் பயன்படுத்த இயலும்.

மேலும் வானில் 10 நிமிடங்கள் வரை ஒரே இடத்தில் நிற்கும் திறனும் இந்த ஹெலிகாப்டரில் இருந்திருக்கவேண்டும். ஆனால், 3 நிமிடங்கள் மட்டுமே இந்த ஹெலிகாப்டரால் பறந்தவண்ணம் நிற்க முடிகிறது. இதனால்மீட்புப் பணிகள் போன்ற நடவடிக்கைளில் இதை வைத்துக் கொண்டு ஈடுபட முடியாது.

அதே நேரத்தில் ராணுவத்தில் ஹெலிகாப்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருக்கும் ஹெலிகாப்டர்களைவைத்துக் கொண்டு நீண்ட நாள் சமாளிக்க முடியாது என்பதால் உடனடியாக மிக உயரத்தில் பறக்கும் சக்தி கொண்ட30 ஹெலிகாப்டர்களை வாங்குமாறு பாதுகாப்பு அமைச்சகத்திடம் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.

ஏ.எல்.எச். என்று அழைக்கப்படும் அட்வான்ஸ்ட் லைட் ஹெலிகாப்டர் ஒவ்வொன்றும் 4.5 மில்லியன் டாலர்மதிப்புள்ளது. இந்த ரகத்தைச் சேர்ந்த 300 ஹெலிகாப்டகளைத் தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்திட்டமிட்டுள்ளது. கடந்த 1998ம் ஆண்டிலேயே தயாரிப்புப் பணிகள் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், திட்டம்2005ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+