முன் ஜாமீன் கோரும் சரவண பவன் அதிபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருமணமான இளம்பெண்ணை மிரட்டித் திருமணம் செய்யமுயன்ற ஹோட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபால்தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் பிரபலமான சரவணபவன் என்ற பெயரில் ஹோட்டல்களை நடத்தி வருபர் ராஜகோபால். இவர் மீதுஜீவஜோதி என்ற இளம் பெண் போலீசில் புகார் கொடுத்தார். இவர் ஏற்கனவே திருமணமானவர். இவரது கணவர்பெயர் பிரின்ஸ் சாந்தகுமார்.

ஜீவஜோதி போலீசில் கொடுத்த புகாரில், கணவரை விரட்டி விட்டுவிட்டு தன்னிடம் வந்துவிடுமாறு சரவண பவன்அதிபர் ராஜகோபால் என்னை மிரட்டி வருகிறார். என்னை மூன்றாவது திருமணம் செய்து கொள்வதாகவும்கூறுகிறார் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து போலீசார் சரவணபவன் ஊழியர்கள் 5 பேரைக் கைது செய்தனர். ஆனால், ராஜகோபால்தலைமறைவாகிவிட்டார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். எனவே, தூத்துக்குடியிலும் இவரைப் போலீசார்தேடுகின்றனர்.

இந் நிலையில் தனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் தாக்கல்செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

எனது ஹோட்டலில் உதவி மேனேஜராகப் பணியாற்றி வந்த ராமசாமி தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுவெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். அவரது மகள் தான் ஜீவஜோதி.

ஜீவஜோதியும் அவரது அம்மாவும் என்னிடம் வந்து தாங்கள் நடத்திவந்த டிராவல்சில் நஷ்டம்ஏற்பட்டுவிட்டதாகவும், அதனை ஈடுகட்ட கடன் கொடுக்குமாறும் கேட்டனர். நானும் கடன் கொடுத்தேன்.

பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு பெரிய தொகையை என்னிடம் கடனாகக் கேட்டனர். நான் தரமறுத்துவிட்டதால் என்மீது ஆத்திரம் அடைந்து இவ்வாறு பொய் புகார் தந்துள்ளனர்.

நான் குற்றமற்றவன் என் மீது பொய்யாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு இந்த வழக்கில்முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

இவ்வாறு தனது மனுவில் ராஜகோபால் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+