"பொடோ"வை எதிர்த்துப் போராட்டம்: நெடுமாறன் உட்பட 26 பேர் கைது
சென்னை:
"பொடோ" சட்டத்தை எதிர்த்து சென்னையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்திய தமிழர் தேசிய இயக்கத்தின்தலைவர் நெடுமாறன் உட்பட 26 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய அரசு கொண்டு வரவுள்ள "பொடோ" சட்டத்தை தமிழர் தேசிய இயக்கத்தின்தலைவர் பழ.நெடுமாறன் எதிர்த்து வந்தார். இதுகுறித்து தங்கள் எதிர்ப்பைக் காட்ட சென்னை அரசு விருந்தினர்மாளிகை முன்பு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த போலீசாரிடம் நெடுமாறன் அனுமதி கேட்டிருந்தார். ஆனால்போலீசார் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த அனுமதி தர மறுத்து, ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த அனுமதிஅளித்தனர்.
ஆனால் தடையை மீறி நேற்று (திங்கள்கிழமை) நெடுமாறன் தலைமையில் தமிழர் தேசிய இயக்கத்தினர் சென்னைஅரசு விருந்தினர் மாளிகை முன்பு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து நெடுமாறன் உட்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications