மாநிலம் முழுவதும் சோதனை: ரூ. 1 கோடி மதிப்பு குட்கா பறிமுதல்
தஞ்சாவூர்:
தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான கடைகளில் சோதனை நடத்திய நலத்துறை அதிகாரிகள் ரூ. 1 கோடிமதிப்புள்ள பான் மசாலா, பான் பராக், மாணிக்சந்த் போன்ற குட்கா அடங்கிய பொருள்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் இந்தப் பொருள்களுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. இதனை விற்கவும், பதுக்கி வைக்கவும்தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பல கடைகளில் தொடர்ந்து இந்தப் பொருள்களின் விற்பனை நடந்து வருகிறது.
தஞ்சாவூரில் பஸ் ஸ்டாண்ட், கல்லூரிப் பகுதிகள், கிழக்கு வாசல் ஆகிய இடங்களில் பல கடைகளில் மாவட்டஆட்சியரின் உத்தரவின் பேரில் சோதனை நடந்தது. இதில் 8,000 கிராம் எடையுள்ள குட்கா பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சம்.
அதே போல திருநெல்வேலியிலும் நலத்துறை அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தி இநதப் பொருள்களைப்பறிமுதல் செய்தனர். அப்போது கடைக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதமும் தகராறும்மூண்டது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி மாணிக்சந்த்பாக்கெட்களைக் கைப்பற்றினர்.
கோவையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதலானது.
இது குறித்து மாநில நலத்துறை இயக்குனர் டாக்டர் பி.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,
இப்போதைக்கு இந்தப் பொருள்களின் ஸ்டாக்கிஸ்டுகளிடம் தான் சோதனை நடந்து வருகிறது. இன்னும் ஒருவாரத்துக்கு அவர்கள் மீது வழக்கு ஏதும் போடப்படாது. ஆனால், தொடர்ந்து இதை அவர்கள் விற்றால் வழக்குத்தொடரப்படும்.
தடையுத்தரவு திடீரென அறிவிக்கப்பட்டதால் தாங்கள் ஏற்கனவே வாங்கிய இந்தப் பொருள்களை திருப்பிஒப்படைக்க கால அவகாசமே கிடைக்கவில்லை என்று ஸ்டாக்கிஸ்டுகள் கூறியுள்ளனர். இதனால் பெரும் அளவில்நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காகத் தான் அவர்களுக்கு ஒரு வாரம் அவகாசம்தரப்படுகிறது.
சிறிய கடைக்காரர்கள் உடனடியாக இந்தப் பொருள்களை ஸ்டாக்கிஸ்டுகளிடம் தந்துவிட வேண்டும்.ஸ்டாக்கிஸ்டுகள் இதை உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியே கொண்டு சென்றுவிட வேண்டும் என்றுஅறிவுறுத்தியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications