"பொடோ" வை ஆதரித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
திருச்சி:
எப்போதுமே எதையாவது எதிர்த்துத் தான் போராட்டம் நடக்கும். ஆனால், "பொடோ" சட்டத்தை ஆதரித்துபாரதிய ஜனதாக் கட்சியினர் திருச்சி, விருதுநகர் உளபட பல ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மததிய அரசு தீவிரவாதத்தை ஒடுக்க புதிதாக தீவிரவாத தடுப்புச் சட்டம் (பொடோ) என்ற சட்டத்தை அமல்படுத்தத்திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கியஎதிர்க்ட்சிகள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சி இந்தச் சட்டத்தை ஆதரித்து திருச்சி, விருதுநகர் மற்றும் சிலஇடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், உள்நாட்டுப் பாதுகாப்பை சீர்குலைக்க நினைக்கும் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காகஇயற்றப்படும் "பொடோ" சட்டத்தை அமல்படுத்த இடையூறாக இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கோஷங்கள்எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும், ஏராளமான பெண்களும், தொண்டர்களும்கலந்துகொண்டனர்.