இந்தியாவுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைகிறது
டெல்லி:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் அமெரிக்க, ஐரோப்பியதொழிலதிபர்களின் எண்ணிக்கையும் சுற்றுலாப் பயணிகளின் குறைந்துவிட்டது என்று மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷானவாஸ் உஷேன் கூறினார்.
அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, ஏர் இந்தியாவின் விமானப்போக்குவரத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு நாள் நிறுத்துவதால் ரூ.8.5 லிருந்து ரூ.10 கோடி வரைநஷ்டம் ஏற்படுகிறது.
மேலும் சில சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் இந்தியாவுக்கு வருவதை நிறுத்தின. இருப்பினும்இதனால் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படாது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து டெல்லி சென்ற விமானம் கடத்தப்பட்டதாக தவறான செய்திவெளிவந்தது. இதற்குக் காரணம் ஒரு மர்மத் தொலைபேசியாகும். இதுகுறித்து விசாரிக்க ஒரு உயர்மட்டவிசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்தக் குழு தனது விசாரணை முடிவுகளை அரசுக்குத்தெரிவிக்கும்.
மேலும் கடந்த ஆண்டில் 3 விமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் தனியாருக்குச் சொந்தமான கிளைடர்விமான விபத்தும் ஒன்றும் அடங்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.












Click it and Unblock the Notifications