தாராபுரம் அருகே வேன்-லாரி மோதல்: 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்:
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர்பலியாயினர். ஒருவர் காயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்ப்புறமாக டேங்கர் லாரிஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒன்பது பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
மற்றொருவர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இவ்விபத்தில்படுகாயமடைந்த மற்றொருவர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்தில் இறந்து போன 10 பேருமே வேனில் பயணம் செய்த ஆண்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications