பாளையங்கோட்டையில் ரூ.2 கோடி மதிப்பு பிரவுன் சுகர் பறிமுதல்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள பிரவுன் சுகரைப் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாகபாளையங்கோட்டை வாலிபரைக் கைது செய்தனர்.
ராமநாதபுரம் பஸ் நிலையத்தைச் சுற்றி போதைத் தடுப்பு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரைப் பிடித்து அவர்கள் விசாரித்தனர். அவர்பாளையங்கோட்டையைச் சேர்ந்த வேலுத் தேவர் என்பவரின் மகன் மலையாண்டி (33) என்பது தெரிய வந்தது.
பின்னர் அவரை போலீசார் சோதனையிட்டபோது, அவரிடம் 10 கிராம் பிரவுன் சுகர் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரைப் போலீசார் துருவித் துருவி விசாரித்தபோது, பாளைங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் 2கிலோ எடையுள்ள பிரவுன் சுகரைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறினார்.
உடனே போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் பாளையங்கோட்டைக்கு விரைந்து சென்று பிரவுன் சுகரைக்கைப்பற்றினர். சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.












Click it and Unblock the Notifications