For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சிபுரம்: ஆசிட் லாரி மீது மற்றொரு லாரி மோதி ஒருவர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காஞ்சிபுரம் அருகே இரண்டு லாரிகள் மோதிக் கொண்டதில் ஆசிட் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து ஒருவர்பலியானார். இரண்டு பேர் தீயில் கருகி உயிருக்குப் போராடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ளது வெள்ளை கேட். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்த இடத்தில் வேலூரிலிருந்துஆசிட் ஏற்றி வந்த ஒரு லாரி பழுதடைந்து நின்று கொண்டிருந்தது.

அப்போது ராணிப்பேட்டையிலிருந்து சென்னைக்கு வந்த டேங்கர் லாரியொன்று ஆசிட் ஏற்றிய லாரி மீதுபயங்கரமாக மோதியது.

இதில் ஆசிட் இருந்த லாரி பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயேபலியானார்.

இவ்விபத்தில் இரண்டு பேர் தீயில் கருகினர். அவர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களது உயிர் ஊசலாடி வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X