For Daily Alerts
Just In
தமிழக அதிரடிப்படை தான் கைது செய்யச் சொன்னதா?
அந்தியூர்:
தமிழக பத்திரிக்கையாளர் ஒருவரை கர்நாடக போலீஸார் கடத்திச் சென்று கைது செய்துள்ளதாக பரபரப்புஏற்பட்டுள்ளது.
அதேபோல ஆத்தூரில் இருந்த சிவசுப்பிரமணியம் திடீரென கொள்ளேகாலுக்கு எப்படிப் போனார் என்பதில்பெரும் குழப்பம் நிலவுகிறது.
நிருபர் சிவசுப்பிரமணியத்தை கூட்டிச் சென்றது கர்நாடக அதிரடிப்படை போலீஸார்தான் என்றும், அவரைஆத்தூரில் வைத்துக் கைது செய்வது சரியாக இருக்காது என்பதால் அவரை காட்டுக்குள் வரச் செய்து கூட்டிச்சென்றுள்ளனர்.
தமிழக காட்டுக்குள் வைத்து விசாரணை நடத்திவிட்டு பின்னர் கர்நாடக பகுதிக்குக் கொண்டு சென்று கைதுசெய்துள்ளதாக ஒருதகவல் கூறுகிறது.
அதேசமயம், தமிழக அதிரடிப்படை போலீஸார்தான் கர்நாடக அதிரடிப்படை போலீஸாரிடம் சிவசுப்ரமணியத்தைஒப்படைத்து விட்டதாகவும் இன்னொரு தகவல் கூறுகிறது.
Comments
Story first published: Thursday, November 22, 2001, 5:30 [IST]