"நக்கீரன்" நிருபர் கர்நாடக போலீசாரால் கைது

Subscribe to Oneindia Tamil

கொள்ளேகால் (கர்நாடகா):

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட "நக்கீரன்" நிருபர் சிவசுப்பிரமணியம் கர்நாடக அதிரடிப் படை போலீசாரால் கைதுசெய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

தன் கணவரை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் அவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் சிவசுப்பிரமணியத்தின்மனைவி ஜெயந்தி சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீசில் புகார் செய்திருந்தார்.

சிவசுப்பிரமணியத்தைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கோரி ஜனாதிபதி,பிரதமர், தமிழக-கர்நாடக முதல்வர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு "நக்கீரன் ஆசிரியர் கோபால் தந்திஅனுப்பியிருந்தார்.

இந்நிலையில் அவர் கடத்தப்படவில்லை என்றும் கர்நாடக அதிரடிப்படை போலீசார்தான் கைது செய்தனர் என்றும்தெரிய வந்துள்ளது. கொள்ளேகால் தாலுகா ராமபுராவிலிருந்து அந்தியூர் செல்லும் வழியில் உள்ள காட்டுப்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து வீடியோ காமிரா, கேசட், செல்போன் ஆகியவற்றை அதிரடிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் நேற்று மாலை கொள்ளேகால் நீதிமன்றத்தில் சிவசுப்பிரமணியம் ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார்அவரிடம் விசாரணை நடத்துவதற்காக, டிசம்பர் 5ம் தேதி வரை அவரைப் போலீசார் காவலில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+