10,000 தலிபான்கள் சரண்: முக்கிய நகரை இழக்கின்றனர்
குண்டூஸ்:
வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் சுற்றி வளைக்கப்பட்டுள்ள தலிபான், பாகிஸ்தான், செசன்யா,அரேபிய நாட்டுத் தீவிரவாதிகளில் 10,000 தலிபான்கள் மட்டும் சரணடைய ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்துஅந்த நகரத்தை நார்த்தர்ன் அயைன்ஸ் கைப்பற்றவுள்ளது.
நார்த்தர்ன் அலையன்ஸ் படையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அப்துல் ரஷீத் தோஸ்தமும் தலிபான்களின்குண்டூஸ் நகர கமாண்டர் முல்லா முகம்மத் பாஸிலும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து எந்தவிதமான தாக்குதலும் நடத்தாமலேயே குண்டூஸ் நகரை அப்துல் ரஷீத் தோஸ்தம்தலைமையிலான படையினர் கைப்பற்றுவர் என நார்த்தர்ன் அலையன்ஸ் கூறியுள்ளது.
ஆனால், தலிபான்கள் சரணடைவதற்கான வரைமுறைகள் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஆயுதங்களைகீழே போட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
குண்டூஸ் நகரில் சரணடையும் தலிபான்களில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களை மட்டுமே உயிருடன்விடுவோம் எனவும் பாகிஸ்தான், அரேபியா, செசன்யா நாட்டினரை கொன்று குவிப்போம் எனவும் ஏற்கனவேதோஸ்தம் தெரிவித்துள்ளார். இவர்களின் எண்ணிக்கை 6,000 வரை இருக்கும் என்று தெரிகிறது.
இன்று காலை வரை குண்டூஸ் நகரை ஒப்படைத்துவிடுமாறு தலிபான்களுக்கு தோஸ்தம் கெடு விதித்திருந்தநிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நார்த்தர்ன் அலையன்ஸ் கமாண்டர் மெஹ்மூத் சப்தர் கூறுகையில், 97 சதவீத தலிபான்கள சரணடையஒப்புக் கொண்டுவிட்டனர். ஆனால், பின் லேடனின் அரேபிய,செசன்ய தீவிரவாதிகளும், ஐ.எஸ்.ஐ. அனுப்பியபாகிஸ்தான் தீவிரவாதிகளும் தான் சரணடைய மறுத்து வருகின்றனர். அவர்களை சுட்டுத் தள்ளுவோம்.
எப்படியிருந்தாலும் இன்று குண்டூஸ் நகருக்குள் நுழையுப் போகிறோம்.
ஜெனரல் நசீர் மெக்மூத் எங்கள் படைகளை தலைமை தாங்கிச் செல்வார் என்றார்.












Click it and Unblock the Notifications