குண்டூஸ் நகரில் நுழைந்தது நார்த்தர்ன் அலையன்ஸ்
கான்பாத்: (ஆப்கானிஸ்தான்)
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள குண்டூஸ் நகருக்குள் நுழையஆரம்பித்துவிட்டனர்.
இதையடுத்து இந் நகரின் முக்கிய தலிபான் கமாண்டர்கள் சரணடைய முன் வந்தனர். அதன்படி ஆயிரக்கணக்கானதலிபான்கள் சரணடைந்துவிட்டனர்.
ஆனால், பாகிஸ்தான், செசன்யா, அரேபியாவைச் சேர்ந்த பின் லேடனின் ஆதரவுப் படையினர் சுமார் 3,000 பேர்சரணடையாமல் இருந்து வருகின்றனர். இவர்களுடன் பல்லாயிரக்கணக்கான தலிபான்களும் உள்ளனர்.
இதையடுத்து அப்துல் ரஷீத் தோஸ்தமின் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் குண்டூஸ் நகருக்குள் பீரங்கள்,டாங்கிகளுடன் நுழைய ஆரம்பித்துவிட்டனர். இங்கு பெரும் அளவிலான உயிரிழப்புகள் ஏற்படும் என்றுதெரிகிறது.
இந்த நகரில் நார்த்தர்ன் அலையன்ஸ் நுழைவதற்கு அமெரிக்க போர் விமானங்கள் உதவின. பி-52 ரகவிமானங்களைக் கொண்டு மிகப் பெரிய குண்டுகளை தலிபான் படைகள் மீது அமெரிக்கா தாக்கியது. அந்தப்படைகள் நிலை குலைந்த நேரத்தில் நார்த்தர்ன் அலையன்ஸ் படை உள்ளே நுழைந்தது.
ஒசாமவை தேட புதிய உளவு விமானம்:
இதற்கிடையே ஒசாமா பின் லேடனைத் தேட குளோபல் ஹாக் என்ற புதிய உளவு விமானத்தை அமெரிக்காகளத்தில் இறக்கியுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்,