மத்திய அமைச்சரவையில் விரைவில் பா.ம.க.
திருநெல்வேலி:
விரைவில் மத்திய அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் ராமதாஸ்கூறினார்.
இதுகுறித்து நெல்லையில் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது,
சந்தன வீரப்பனைக் காட்டில் பலமுறை சந்தித்துப் பேசியதற்காக, நக்கீரன் வார இதழ் நிருபர் சிவசுப்ரமணியத்தைகர்நாடக அதிரடிப் படைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்துக்குள் நுழைந்து கர்நாடகப் போலீசார் இவ்வாறு செய்திருப்பது முறையல்ல. உடனே அவரை விடுதலைசெய்ய வேண்டும்.
மேலும் சந்தன வீரப்பனுக்கு பொது மன்புப்பு வழங்க வேண்டும். அவரைப் பிடிப்பதற்காக இதுவரை வீணாக ரூ.600கோடி செலவிடப்பட்டுள்ளது. அதை பல நல்ல திட்டங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கலாம்.
மத்திய இமைச்சரவையில் எங்கள் கட்சி விரைவில் இடம்பெறும் என்று நம்புகிறேன். இதுகுறித்து நான் பிரதமர்வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோருடன் பேசியுள்ளேன்.












Click it and Unblock the Notifications