நாமக்கல், திருச்சியில் அதிக அளவில் எய்ட்ஸ்
சென்னை:
தமிழகத்தில் மொத்தம் 12,000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ள.
கோயம்புத்தூரில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டிகோயம்புத்தூரில் 2 நாள் கருத்தரங்கிற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் வேலுசாமி, கோவை மேயர் மலரவன் மற்றும்சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் மொத்தம் 12,000 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு உள்ளது.இவர்கள் பெரும்பாலும் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கருத்தரங்கில் பாலியல் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும்கலந்துகொண்டுள்ளனர்.
மதுரையில் கருத்தரங்கு:
இதேபோல மதுரையில் நடந்த கருத்தரங்கில் சபாநாயகர் காளிமுத்து கலந்துகொண்டு பேசினார்.
அவர் கூறும்போது, எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க தனி மனித ஒழுக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.திருவள்ளுவர் கூறிய தனிமனித ஒழுக்கம் தான் இந்த நோய் வராமல் தடுக்க ஒரே வழி என்றார்.












Click it and Unblock the Notifications