இலங்கைப் பிரதமரைக் கொல்ல சந்திரிகா திட்டம்?
கொழும்பு:
தனது சகோதரத் அனுரா பண்டாரநாயகாவை பிரமதராக்குவதற்காக இப்போதைய பிரதமர் ரத்னசிரிவிக்கிரமநாயகேவைக் கொல்ல இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா திட்டமிட்டுள்ளதாக பயங்கர புகார்கூறப்பட்டுள்ளது.
நேற்று நிருபர்களிடம் பேசிய திஸ்ஸநாயகே இந்த குற்றச்சாட்டைக் கூறினார். அவர் பேசுகையில்,
பிரதமர் ரத்னசிரி விக்ரமநாயகேவைக் கொல்ல அரசே முயன்று வருகிறது. அவரைத் தீர்த்துக்கட்டிவிட்டு தனதுதம்பி பண்டாரநாயகேவைப் பிரதமராக்க சந்திரிகா திட்டமிட்டுள்ளார்.
கப்பல் படையிலிருந்து சமீபத்தில் விலகிய வீரர் ஒருவரைக் கொண்டு அவரை சுட்டுத் தள்ள முயற்சி நடக்கிறது.இந்த வீரர் இப்போது அரசுக்கு மிக நெருங்கிய வழக்கறிஞருக்கு பாதுகாவலராக இருந்து வருகிறார்.
இந்த வீரர் இருந்த கடற்படை முகாமை சில ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் புலிகள தாக்கினர். அதில் பல வீரர்கள்இறந்தனர். அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிய இந்த வீரர் நவீன துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டுஓடிவிட்டார். இந்தத் துப்பாக்கியால் 1,000 மீட்டர் தொலைவு வரை சுட முடியும்.
பிரதமரைக் கொல்ல இந்தத் துப்பாக்கியை பயன்படுத்துமாறு அவருக்கு சந்திரிகா அரசு கூறியுள்ளது. மேலும்என்னையும், பேராசிரியர் ஜி.எல். பெரிஸையும் கொல்லவும் சந்திரிகா உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. நாங்கள்அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்து எதிர்க் கட்சிக்கு சென்றதால் கோபமாக உள்ளார்சந்திரிகா.
இவ்வாறு திஸ்ஸநாயகே குற்றம் சாட்டினார்.
கலைக்கட்ட நாடாளுமன்றத்தில் சபாநாயகராக இருந்தவர் சந்திரிகாவின் சகோதர் பண்டாரநாயகா என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆனால், திஸ்ஸநாயகேவின் இந்தக் குற்றச்சாட்டை அதிபர் சந்திகா மறுத்துள்ளார். இது அரசியல் பழிவாங்கும்நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டாகும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications