அதிமுக மிரட்டல்: பணிகிறது காங்கிரஸ்
டெல்லி:
அதிமுகவுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொள்ளவே விரும்புகிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ரமேஷ் சென்னிதலா கூறினார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த அதிமுக இப்போது எந்தக் கூட்டணியில் இல்லை என்று அதன்தலைவர் ஜெயலலிதா அறிவித்துவிட்டார். மேலும் மத்தியில் பா.ஜ.க. அரசுக்கு கொள்கைகள், பிரச்சனைகள்அடிப்படையில் ஆதரவு தரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்ட ஜெயலலிதா, அம் மாநில காங்கிரஸ் அரசுக்குகொடுத்த வந்த ஆதரவையும் வாபஸ் வாங்கிவிட்டார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் எங்கள் முதுகில் குத்திவிட்டது என்றும், அதனால்தான் கூட்டணியில் இருந்துவிலகிவிட்டோம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார். இதுகுறித்து டெல்லியில் அகிலஇந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ரமேஷ் சென்னிதலா கருத்துக் கூறுகையில்,
பாண்டிச் சேரியிலோ, தமிழகத்திலோ அதிமுகவின் மனம் புண்படும்படியாகவோ, அவர்களை அவமதிக்கும்விதத்திலோ காங்கிரஸ் நடந்துகொள்ளவில்லை. நாங்கள் எப்போதுமே அதிமுக மற்றும தமிழ் மாநில காங்கிரஸ்கட்சிகளை மதித்து அவர்களுடன் தொடர்ந்து கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறோம்.
பாண்டிச்சேரியில் சபாநாயகர் ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நான் கருத்துக்கூறவிரும்பவில்லை என்றார் கூறினார்.












Click it and Unblock the Notifications