பஸ் ஊழியர்களை அரசு மிரட்டுகிறது- திமுக புகார்
சென்னை:
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் அரசு மிரட்டி கையெழுத்து வாங்கி,போராட்டத்திலிருந்து வாபஸ் பெற வைக்கிறது என்று தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவரும் திமுகஎம்.பி.யுமான செ.குப்புசாமி கூறினார்.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கேட்டுப் போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் உள்ள தொழிலாளர்களிடம் போராட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அரசு மிரட்டிக் கையெழுத்துவாங்குகிறது என்று தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர் செ.குப்புசாமி எம்.பி கூறினார்.
இன்று (சனிக்கிழமை) சென்னையில் இதுறித்து அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது,
கைது செய்யப்பட்டுள்ள போக்குவரத்த் தொழிலாளர்களிடம், போராட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அரசுமிரட்டி, கையெழுத்து வாங்கி வருகிறது. இவ்வாறு அரசால் மிரட்டப்பட்ட பல தொழிலாளர்கள் எங்களிடம் புகார்கூறியுள்ளனர். அரசின் இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
இதுகுறித்து அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தாவிடம் புகார்கொடுத்துள்ளோம்.
மேலும் அடுத்த கட்டநடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த இன்று மாலை 4 மணியளவில் சென்னையில்அனைத்துத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவைவைத்து, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications