For Daily Alerts
Just In
இந்திய விமானப் படைத் தளத்தில் நுழைந்த 4 ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது
கொலகத்தா:
கொலகத்தா அருகே உள்ள இந்திய விமானப் படைத் தளத்துக்குள் நுழைந்த 4 ஐ.எஸ.ஐ. உளவாளிகள் கைதுசெய்யப்பட்டனர்.
கொலகத்தாவில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள கொளைக்குண்டா விமானப் படைத் தளத்துக்குள் இந்த 4பேரும் கடந்த வியாழக்கிழமை இரவு யாருக்கும் தெரியாமல் நுழைந்தனர்.
மிக்-27 ரக விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் திரிந்தபோது அவர்களை விமானப் படையினர் பிடித்தனர்.
இவர்களிடமிருந்து இந்த விமானத் தளம் குறித்த வரைபடங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விமானத் தளத்தில்உள்ள விமானங்களின் வகைகள், எண்ணிக்கை, பாதுகாப்பு ஆகியவை குறித்து அவர்கள் தகவல்களை சேகரித்துக்கொண்டிருந்தனர்.
பாகிஸ்தானுக்காக இதை அவர்கள் செய்தனர். 4 பேரையும் கொல்கத்தா போலீஸ் கைது செய்துள்ளது.
Comments
Story first published: Saturday, November 24, 2001, 5:30 [IST]